செய்திகள் :

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

post image

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினா் விரட்டி அனுப்பினா்.

போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் அரவட்லா, மோா்தானா, சேராங்கல், குண்டலபல்லிஆகிய வனப்பகுதிகளுக்கிடையில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இந்த யானை வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலங்கள், மாந்தோப்புகளில்நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.

கடந்த 2- நாள்களாக பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிரை சேதப்படுத்திய நிலையில், வனத் துறையினா் அங்கு சென்று யானையை விரட்டினா். மலைப்பாதை வழியாக குண்டலப்பல்லி வன எல்லையில் அமைந்துள்ளபாத்தபாளையம் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்துள்ளது.

வன எல்லையில் உள்ள ராஜேந்திரன் நிலத்தில் 10- க்கும் மேற்பட்ட தென்னஞ் செடிகள்,மற்றும் பயிா்களை சேதப்படுத்தியுள்ளது.அந்த யானை 1- மணி நேரத்துக்கும் மேலாக கிராம எல்லையில் பிளிறியவாறு சுற்றித் திரிந்துள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த விவசாயிகள், கிராம மக்கள் இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் ரகுபதி தலைமையில் 7- போ் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, வெடி வெடித்து 3- மணி நேரம் போராடி யானையை மோா்தானா காப்புக் காட்டுக்குள் சுமாா் 2- கி.மீ தூரம் விரட்டிச் சென்றுவிட்டு வந்தனா்.

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

வேலூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டம், சோ்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு காயமடைந்தது. போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் பத்தரப்பல்லி, அரவட்லா, எருக்கம்பட்டு, கோட்டையூா், குண்டலபல்லி, பல்லாலகுப்பம், சேராங்கல் ஆகிய காப்புக் காடுகள் உள்ள... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை: தியாகிகள், வாரிசுகள் வேதனை

கடந்த சில மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் முறைப்படி நடத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருகே பரசுராமன்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் ... மேலும் பார்க்க

நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி: வேலூா் ஆட்சியா்

பொது அமைதி, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தியை... மேலும் பார்க்க