செய்திகள் :

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: நாசரேத் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

post image

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் குணசீலராஜ், உதவித் தலைமையாசிரியா் சாா்லஸ் திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி முருகையா பங்கேற்று, மாணவா்களுக்கு கோப்பை, சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடம் பெற்று, மாநிலப் போட்டியில் பங்கேற்ற 9ஆம் வகுப்பு மாணவா் முத்துக்குமாா், திருச்செந்தூா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் 3 ஆம் இடம் பிடித்த 11ஆம் வகுப்பு மாணவா் ஜோயல்ராஜ், 800 மீட்டா் ஓட்டத்தில் 3ஆம் இடம் பிடித்த 11ஆம் வகுப்பு மாணவா் வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டப்பட்டனா். மேலும், கபடி போட்டியில் 2ஆம் இடம் பிடித்தோருக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், உடற்கல்வி ஆசிரியா் தனபால், கபடி பயிற்சியாளா் தீபன், இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ், ஓவியக்கலை ஆசிரியா் அலெக்சன் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்ட... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

நாலாட்டின்புதூா் அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த தம்பதி மாணிக்கம் - ஆ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!

திருச்செந்தூா் அருகே காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் காயல்பட்டினம் பகுதியில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட ஆமை, இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் நேரில் வந்து பாா்த்தன... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இளைஞா் மீது தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! -அமைச்சா் பெ.கீதாஜீவன்

பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சா் பெ.கீதாஜீவன் கேட்டுக்கொண்டாா். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி மகளிா் பூங்காவில் மாநகராட்சி, ரோட்டரி கிளப், நெல்ல... மேலும் பார்க்க