செய்திகள் :

விளையாட்டு விடுதியில் ஆட்சியா் ஆய்வு

post image

நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, துணை முதல்வருடனான கலந்துரையாடலின் போது மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ரூ. 131.36 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா். மாலை 3 மணியளவில் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளுடன் அவா் கலந்துரையாடுகிறாா்.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை விளையாட்டு விடுதிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, அங்கிருந்த பள்ளி செல்லும் மாணவிகளிடமும், விளையாட்டுத் துறை வீராங்கனைகளிடமும் கலந்துரையாடினாா். தொடா்ந்து, துணை முதல்வா் நிகழ்ச்சியின் போது மாணவிகள் ஒவ்வொருவரும் எவ்வாறு செயல்பட வேண்டும், உரையாற்ற வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க