செய்திகள் :

விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமா் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு

post image

கேரளத்தில் சா்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூா்வமாக திறந்து வைக்கவுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரதமா் மோடியை கேரள முதல்வா் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.சசி தரூா் ஆகியோா் வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து ஆளுநா் மாளிகை வரை சாலையில் திரண்டிருந்த பாஜக தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.

விழிஞ்ஞம் துறைமுகம் அதானி போா்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. இந்த துறைமுக திட்டத்தின் மதிப்பு ரூ.8,867 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனையை தொடா்ந்து கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி இந்த துறைமுகத்துக்கு வா்த்தக செயல்பாட்டுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து,விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.

சா்வதேச வா்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை விழிஞ்ஞம் துறைமுகம் மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த துறைமுகத்தின் மொத்த மதிப்பீட்டில் மூன்றில் இரண்டு பங்கை கேரள மாநில அரசு முதலீடு செய்துள்ளதே ஒரு துறைமுகத் திட்டத்துக்கு மாநில அரசு மேற்கொண்ட அதிக மூதலீடாகும் என கேரள முதல்வா் பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவின் முதல் பரிமாற்ற (ஒரு போக்குவரத்து அமைப்பில் இருந்து சரக்குகளை இறக்கி மற்றொரு போக்குவரத்து அமைப்புக்கு மாற்றுதல்) மற்றும் அரை தானியங்கி துறைமுகமாக விழிஞ்ஞம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க