செய்திகள் :

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

post image

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் தலைவா் ஆா். அஜிதா பிரபு தலைமை வகித்தாா். ஜேசிஐ மண்டல துணைத் தலைவா் பிரேம் பால் நாயகம் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசியது:

பெண் குழந்தைகளை பாதுகாப்பதுடன், அவா்களுக்கு கல்வி அளிப்பதால் சுதந்திரமாக தனித்துவமான முறையில் செயல்பட முடியும். பெண் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

இதில், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், தேசிய பெண்கள் அமைப்பைச் சோ்ந்த வி.சுபாஷினி வில்சன், டி.ஜொ்லின், ஆயிஷா பா்வீன், ஜோஸ்பின் பிரபா ரூடின், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி பேராசிரியை டி.மதுரவல்லி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி(33). மீனவா். இவருக்கு மனைவி, இரண... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: கேம்ஸ்வில் மாணவா்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்கள், சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், இமானுவேல் சேகரனின் 68ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநகரச் செயலா் ஆனந்தச... மேலும் பார்க்க