செய்திகள் :

விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் ஜமாபந்தி நடத்தப்படுவதால் இந்த மாதத்துக்கான கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன், செயலர் முருகன் மற்றும் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு வந்தனர். தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் முன்பு சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியல் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜமாபந்தி நடத்தப்படுவதன் காரணமாகத்தான் விவசாயிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. அடுத்த மாதம் கண்டிப்பாக கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்ட விவசாயிகள், மற்ற மாவட்டங்களில் கூட்டம் நடைபெறும்போது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அலுவலர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!

சென்னை: கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு

புது தில்லி: ஆசிய வளா்ச்சி வங்கி தலைவா் மசாடோ காண்டாவை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான மாற்றம், எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது என... மேலும் பார்க்க

மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியது!

புது தில்லி: நாட்டில் தொடா்ந்து இரண்டாவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவர... மேலும் பார்க்க

ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: ஓய்வு பெற்றவா்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமா்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது, கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா்... மேலும் பார்க்க

எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே 'கட்டுப்பாட்டை மீறியது'தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.மதுரையி... மேலும் பார்க்க