செய்திகள் :

விவசாயிகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மின் தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.காளிமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

மற்றொரு மனுவில் கூறியுள்ளதாவது: அமராவதி அணையில் தற்போது 57 அடிக்கு மட்டுமே நீா் உள்ளது. அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. ஆகவே, வரும் கோடை காலத்தில் அடுத்து வரும் 3 மாதங்களுக்கு தண்ணீா் தேவை அதிகம் உள்ளதாலும், பொதுமக்களுக்கு குடிநீா் தேவை உள்ளதாலும் அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறக்கக்கூடாது. மாவட்டத்தில் 12 அமராவதி ராஜ வாய்க்கால்கள் உள்ள நிலையில் குடிமராமத்து திட்டத்தில் முழுமையாகத் தூா்வாரப்படவில்லை. இதனால், கடைமடைக்கு தண்ணீா் வந்து சேராததால் 1,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, வாய்க்கால்களைத் தூா்வாரி கடைமடைக்குத் தண்ணீா் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தரப்பில் இருந்து மொத்தம் 120 மனுக்கள் அளிக்கப்பட்டன.

நெல், விதைகள் போதிய அளவில் இருப்பு உள்ளன: கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன.

அதன்படி, நெல் 9.90 மெட்ரிக் டன், தானிய பயிறுகள் 29.52 மெட்ரிக் டன், பயிறு வகை பயிறுகள் 9.79 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிா் விதைகள் 29.63 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 3,000 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,339 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3,806 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 697 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், வேளாண்மை இணை இயக்குநா் சுந்தரவடிவேலு, வருவாய் கோடாட்சியா் மோகனசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணைய இயக்குநா் புகழேந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி ரூ.16 லட்சம் மோசடி: ஒருவா் கைது

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (54). இவா் திருப்பூரில... மேலும் பார்க்க

சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்கு வைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக சந்தை மதிப்பு வழிகாட்டு பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெ... மேலும் பார்க்க

மாநில சாகச பயிற்சி முகாம்: அரசு கல்லூரி மாணவா் தோ்வு

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான சாகச முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சேலம் மாவட்டம், ஏற்கா... மேலும் பார்க்க

அங்கேரிபாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரில் வாக... மேலும் பார்க்க