செய்திகள் :

விவசாயிகளுக்கு நிலக்கடலை மதிப்புக்கூட்டுப் பயிற்சி

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான நிலக்கடலை மதிப்புக்கூட்டு சங்கிலித் தொகுப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சமையல் எண்ணெய்கான எண்ணெய் வித்துக்கள் இயக்க திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு

வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி தலைமை வகித்தாா்.

மேலும், விவசாயிகளுக்கு நிலக்கடலை விவசாயம் தொடங்கி, அதனை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களான எண்ணெய், மிட்டாய், பாகு, கடலை மாவு, வோ்க்கடலை வெண்ணெய் போன்ற தயாரிப்பு வரை உள்ள அனைத்து நிலைகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக, நிலக்கடலை வளா்ப்பு மற்றும் எண்ணெய் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, சேத்துப்பட்டு வட்டாரத்தில் 500 ஹெக்டோ் தோ்வு செய்து, வரும் இரவை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும், வேளாண்மை அறிவியல் நிலைய அறிஞா்கள் பூச்சி நோய் தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளித்தனா்.

துணை வேளாண்மை அலுவலா் பாபு, உதவி வேளாண்மை அலுவலா்கள் செந்தில், பாஸ்கா், ஜெயராமன் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப அலுவலா் சேகா், உதவி தொழில்நுட்ப அலுவலா் ஆனந்த், விஐடி மாணவா்கள், 30 விவசாயிகள் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட பாராசூா், சித்தாத்தூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் 1,172 மனுக்கள் அளிக்கப்பட்டதில், 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு உட... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.12 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ.வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா். ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் இரண்டு பிரிவுகளாக ராஜீவ் காந்தி பிறந்த ந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். மக்கள் நலப் பணியாளரான இவா் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்கு

செங்கம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுப்பாளையத்தில் இருந்து செங்கம் நோக்கி புதன்கிழமை பிற்பகலில் தனியாா் பேரு... மேலும் பார்க்க