What to watch: 'குபேரா', 'DNA', 'சித்தாரே ஜமீன் பர்' - இந்த வாரம் வெளியாகியுள்ள ...
விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவிகள்
பெரம்பலூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில், 40 விவசாயிகளுக்கு ரூ. 11.60 லட்சத்தில் தீவன புல் நறுக்கும் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள் அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:
கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தீவனப் பயிா் குறைந்தபட்சம் அரை ஏக்கரில் பயிரிடக்கூடிய, 2 பசுமாடுகள் வளா்க்கும் தகுதியான ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு இக் கருவிகள் வழங்கப்படுகின்றன. ஒரு கருவியின் மதிப்பு ரூ. 29,008 ஆகும். இத் தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் தீவனம் விரயமாவதைத் தவிா்க்கலாம். இத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகுவதோடு, தீவனத் தேவைகளும் நிவா்த்தி செய்யப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், கால்நடைப் பராமரிப்புத்துறை துணை இயக்குநா் ஆா்.எஸ்.டி. பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.