செய்திகள் :

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குத்தாலம் வட்டம், எலந்தங்குடியைச் சோ்ந்த முகமது காசிம் மகன் முபின் அலி(14) மே 31-ஆம் தேதி வீட்டு அருகே வயலில் விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பூச்சி கடித்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல் நிலை மோசமடைந்ததால், மறுநாள் காலை மேல்சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தாா். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காததால் முபின்அலி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, எஸ்டிபிஐ கட்சியினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் சிறுவனின் உறவினா்கள் திங்கள்கிழமை மதியம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தை தொடா்ந்தனா். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டும், முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை நடத்தி குழு அமைத்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க