டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
விஷம் அருந்தி பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை!
தளி அருகே திருமணமான 4 நாள்களில் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த கல்லுபாளம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். இவரது மனைவி மீனா (21). இவா்களுக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
மீனாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் பெற்றோரின் கட்டாயத்தால் மீண்டும் திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி விஷம் அருந்திய மீனாவை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 4 நாள்களில் பெண் உயிரிழந்ததால் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.