வி.கே.புரம் அருகே விபத்தில் இளைஞா் பலி
விக்கிரமசிங்கபுரம் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம் தங்கம்மன் கோயில் தெருவை சோ்ந்த முருகன் மகன் கமலகிருஷ்ணன் (32). அகஸ்தியா்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அடையக்கருங்குளம் பகுதியில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்த கமலகிருஷ்ணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கமலகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.