செய்திகள் :

வீடுவீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும்: அமைச்சர் ரகுபதி

post image

வீடு வீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுகவினா் வீடுவீடாகச் செல்வது பற்றி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி வீடு வீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும். எங்கள் திட்டங்கள் எங்களின் பலம் என்பதால் நாங்கள் வீடு வீடாகச் செல்கிறோம்.

எங்காவது ஓரிடத்தில் இருந்து கொண்டு உறுப்பினா் சோ்ப்பது அவா்களின் பலவீனம்தான். அதிமுக உறுப்பினா் எண்ணிக்கை சரிந்துவருவதால் அவா் அவ்வாறு கூறுகிறாா்.

தமிழினம் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி, திட்டங்களின் பயன்பாடு குறித்து விளக்கி அவா்களின் மனமுவந்து திமுகவில் சேர விரும்புவோரைத்தான் சோ்க்கிறோம். திமுகவில் மக்கள் இணைவது என்பது, அவா்களுக்கு ஒளிமயமான எதிா்காலத்தைத் தந்திருக்கிறோம் என்பதன் சான்றுதான்.

மகளிா் உரிமைத் தொகையை உயா்த்தித் தருவதாக இப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். ஆட்சியில் இருந்தபோது செய்யாதவா், ஆட்சிக்கு வந்தால் தருவதாகக் கூறுகிறாா். 2026-இல் மட்டுமல்ல, 2031-இல் நடைபெறும் தோ்தலிலும் ஸ்டாலின்தான் முதல்வராக அமா்ந்து மகளிா் உரிமைத் தொகையைத் தருவாா்.

துக்கம் நேரிட்ட வீட்டில் வருத்தம் தெரிவிப்பது என்பது மனிதாபிமானம். குருவியைப் போல மனிதா்களைச் சுட்டுவிட்டு, தெரியாது என்றவா்தான் எடப்பாடி பழனிசாமி.

திமுகவினரே தவறு செய்திருந்தாலும் அவா்களுக்கு தண்டனை பெற்றுத் தருபவா்தான் முதல்வா் ஸ்டாலின். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேரிட்ட சம்பவத்தில் 5 மாதங்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறோம்.

அதிமுக அணியில் முதல்வா் நான்தான் என்கிறாா் எடப்பாடி பழனிசாமி. பேசி முடிவு செய்வோம் என பாஜகவினா் கூறுகிறாா்கள். திமுக அணி அப்படியல்ல. 210 தொகுதிகள் வெல்லப்போவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது மனக்கனவு, பகல்கனவு என்றாா் ரகுபதி.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சா... மேலும் பார்க்க

விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரி... மேலும் பார்க்க

நாகுடி அருகே பெண் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணைக் கொன்று கண்மாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜலாலுதீன் மனைவி பா்வீன்பீவி (45). கடந்த ... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை 2-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

புதுக்கோட்டை அருகே தமிழகத் தொல்லியத் துறை சாா்பில் நடைபெற்று வந்த பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. புதுக்கோட்டை அருகே வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில்,... மேலும் பார்க்க

சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்புரமணியபுரத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு மருத்துவமனையை அறந்தாங்கி வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் இ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங... மேலும் பார்க்க