செய்திகள் :

``வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள், யாராவது உதவுங்கள்'' - கதறி அழுத பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா

post image

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் ஆஷிக் பனாயா ஆப்னே உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

வைரலாகி இருக்கும் அந்த வீடியோவில், "வீட்டில் என்னை மிகவும் துன்புறுதுகிறார்கள். கடந்த சில வருடங்களாக என்னை துன்புறுத்துகிறார்கள். அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன்.

தனுஸ்ரீ தத்தா

அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். என்னிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து முறைப்படி புகார் செய்யும்படி தெரிவித்துள்ளனர். நான் நிச்சயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்வேன்" என்று தனுஸ்ரீ தத்தா அழுதபடி பேசியுள்ளார்.

அவர் மேலும் வீட்டில் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. என்னால் வீட்டில் வேலைக்கு கூட ஆள்களை நியமிக்க முடியவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்காரர்களை திட்டமிட்டு எனது வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.

வீட்டு வேலைக்காரர்கள் வீட்டில் இருந்து பொருள்களை திருடிச்செல்கின்றனர். இதனால் வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளாமல் அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். இதனால் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது. வீட்டிற்கு வெளியில் வந்து சத்தம் போடுகிறார்கள். எனது வீட்டில் நான் துன்புறுத்தபடுகிறேன். யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று அழுதபடி பேசியுள்ளார். மேலும் இது குறித்து கட்டிட நிர்வாகத்திடம் புகார் செய்தபோது அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனுஸ்ரீ தத்தா

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், வீட்டிற்குள் வெளியில் இருந்து மிகவும் பலமான சத்தம் கேட்கிறது. அவர் பதிவிட்டுள்ள பதிவில், ''வீட்டிற்கு மேலே இருந்தும், வெளியில் இருந்தும், வீட்டு வாசலுக்கு வெளியேயும் இது போன்று சத்தம் கேட்கிறது. இந்த துன்புறுத்தலை கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து சந்தித்து வருகிறேன்.

இது குறித்து கட்டிட கமிட்டியிடம் புகார் செய்துஓய்ந்து விட்டேன். இப்போது புகார் செய்வதையே விட்டுவிட்டேன். இதனால் இப்போது ஹெட்போன் மாட்டிக்கொண்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்'' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - என்ன சொல்கிறார்?

'புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்' என்ற வாசகத்தை உயிர்பிக்கும் சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்லியன்ஸர் அபினவ் மயிலவரபு ஹைதராபாத்தில் வீட்டுக்குச் செல்ல... மேலும் பார்க்க

``முடி மாற்று சிகிச்சைக்கு பின் உடலுறவு கூடாது'' - மருத்துவ விதிமுறையை மீறிய இளைஞர் சோகம்..

வேல்ஸைச் சேர்ந்த இளைஞர் ரூபன் ஓவன், துருக்கியில் உள்ள கிளினிக்கிற்கு மாடலிங் செய்ய சென்றுள்ளார். அங்கு `இலவசமாக முடி மாற்று அறுவை சிகிச்சை' செய்வதாக கூறியதால் சம்மதித்து அவரது தலையை கொடுத்துள்ளார். அற... மேலும் பார்க்க

Microbiota Vault: பேராபத்தைத் தடுக்க மனித மலத்தை சேமிக்கும் விஞ்ஞானிகள்! - காரணம் என்ன?

மனித மலம், புளித்த உணவுகள் போன்றவற்றை சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) பல்கலைக் கழகம் சேமித்து வருகிறது. இந்த சேமிப்புக்குப் பின்னணியில் பெரும் திட்டமும், தேவையும் இருப்பதாக விஞ்ஞானிகளும், ஆய்வாளர்கள... மேலும் பார்க்க

Numbeo: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா! - எத்தனையாவது இடம்?

Safety Index (பாதுகாப்பு குறியீடு) என்பது ஒரு இடத்தின் பாதுகாப்பு நிலையை அளவிடும் ஒரு கணக்கீட்டு மதிப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், நாடு அல்லது பகுதியின் குற்றச் செயல்கள், காவல்துறை செயல்பாடு, மக்களி... மேலும் பார்க்க

``ஆட்டோ டிரைவர்தான் என்னிடம் முதலில்..." - வைரலான வீடியோ குறித்து சினேகா மோகன்தாஸ் விளக்கம்

நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிர் அணி நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ் (32). ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனராகவும் இருக்கும் இவ... மேலும் பார்க்க

`விமான அவசரம்' - பயணத்தில் மனைவியை மறந்துவிட்டு சென்ற அமைச்சர் சிவராஜ் சிங்.. என்ன நடந்தது?

பயண அவசரத்தில் டிக்கெட்டை எடுக்காமல் சென்றுவிடுவதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் பயண அவசரத்தில் தனது மனைவியையே மறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தி... மேலும் பார்க்க