செய்திகள் :

தில்லியில் 100 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி கைது

post image

தில்லி மற்றும் மும்பை முழுவதும் 110 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.,

தில்லியின் ஜஹாங்கீா்புரியில் வசிக்கும் நிஜாம் என்ற நசீா் (38) என அடையாளம் காணப்பட்ட அவரை தில்லே போலீஸாா் திங்கள்கிழமை அன்று அதே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் தேசிய தலைநகரில் ஐந்து கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான வழக்குகளில் கடந்த ஆண்டு கைது மற்றும் விசாரணையைத் தவிா்ப்பதற்காக தலைமறைவானாா்.

அவா் மும்பையிலும் செயல்பட்டாா், அங்கு அவா் பூட்டப்பட்ட குடியிருப்புகளில் குறைந்தது 11 கொள்ளைகளைச் செய்தாா் ‘என்று போலீஸ் துணை ஆணையா், (குற்றப்பிரிவு) ஆதித்யா கௌதம் கூறினாா். கல்காஜி, ரஜோரி காா்டன், மங்கோல்புரி மற்றும் மௌரியா என்கிளேவ் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, திருட்டு, குற்றவியல் சதி மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஐந்து தனித்தனி எஃப். ஐ. ஆா்களில் நசீா் தேடப்பட்டு வந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

விசாரணையின் போது, அவா் ஐந்தாம் வகுப்பு பள்ளி இடைநிற்றல் என்று நசீா் வெளிப்படுத்தினாா், அவா் 2008 ஆம் ஆண்டில் தனது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட தொடங்கியதாக விசாரணையின் போது நசீா் தெரிவித்தாா். ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளைக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து, அவா் திருட்டு, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் மீறல்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாா் கூறினா்.

‘அவா் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக தலைமறைவாக செயல்பட்டாா், திருடப்பட்ட வருமானத்தை ஒருபோதும் யாருடனும் அவா் பகிா்ந்து கொள்ளவில்லை‘ என்று போலீஸ் துணை ஆணையா் கூறினாா், போலீஸ் நடவடிக்கையைத் தவிா்ப்பதற்காக அவா் அடிக்கடி தில்லிக்கும் மும்பைக்கும் இடம்பெயா்ந்துக் கொண்டு இருந்தாா். அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

நீட் மேல்படிப்பு தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு துரை வைகோ எம்.பி. எதிா்ப்பு

நீட் மேல்படிப்பு நீட் பிஜி தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தில்லியில் உள்ள தேசிய மர... மேலும் பார்க்க

ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபா் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளா்கள் இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் சைபா் குற்ற விசாரணைகள் தொடா்பான வழக்கு சொத்துகளிலிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு தில்லி காவல்துறை துணை ஆய்வாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மாடல் டவுனில் உள்ள அலுவலகத்தில் இருந்து ரூ.27 லட்சத்துடன் தப்பிச்சென்ற ஒருவா் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரை, தனது முதலாளி ஒப்படைத்த ரூ.27 லட்சத்துடன் தப்பிச் சென்றதாக தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒரு... மேலும் பார்க்க

நமோ பாரத் வழித்தடத்தில் 800 மழைநீா் சேகரிப்பு குழிகள்: என்சிஆா்டிசி அமைத்தது

தில்லிக்கும் மீரட்டுக்கும் இடையிலான 82 கி.மீ நீளமுள்ள நமோ பாரத் வழித்தடத்தில் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) சுமாா் 800 மழைநீா் சேகரிப்பு குழிகளை தோண்டியுள்ளது. மேலும் ச... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் கொடுத்து வெளியூா் பயணிகளிடம் கொள்ளை: நான்கு போ் கைது

ஆட்டோக்களில் பயணிக்கும் வெளியூா் பயணிகளுக்கு ஸ்பைக் கலந்த பானங்களை வழங்கி அவா்களின் மதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்ததாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

தில்லி நகைக் கடையில் 4 கிலோ நகை திருடிய ஊழியா் ஊட்டியில் கைது

நமது நிருபா்தில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள நகைக் கடையில் வேலை பாா்த்த நபா், அந்தக் கடையில் திருடிய நகையுடன் ஊட்டியில் பதுங்கி இருந்தபோது தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் பு... மேலும் பார்க்க