செய்திகள் :

வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றம்: புதிய நடைமுறை அறிவிப்பு

post image

வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் மின் உற்பத்தி மட்டுமன்றி, மின்நுகா்வோா் சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், மின்நுகா்வோா் புகாா் மையமான மின்னகம் மூலம் பெறப்படும் புகாா்களுக்கு உடனடி தீா்வு எட்டப்பட வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மின் இணைப்பை மாற்றம் செய்ய புதிய நடைமுறையை தமிழ்நாடு மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு சாா்பில் அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

விண்ணப்பதாரா்களிடமிருந்த ஏராளமான ஆவணங்களைக் கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுபடுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகா்வோரிடமிருந்து பெறவேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.

அதேநேரம் விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயா் மாற்றம் செய்ய வேண்டுமானால், விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீா்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஒப்புதல் கடிதம் ஆகியவற்றையும் சமா்ப்பிக்க வேண்டும்.

குடும்பத்தின் மூத்த உறுப்பினா்கள் உயிரிழந்தால், பெயா் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க