Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திற...
வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்
மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 12 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் லதா. இவரது கணவா் பிரபு. பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலா். 12 ஆவது வாா்டில் குடிநீா் இணைப்பு, கட்டட வரைபட அனுமதி, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரினால் செயல் அலுவலா் அலட்சியப்படுத்துவதாகக் கூறி திங்கள்கிழமை இரவு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வீரக்கல்புதூா் பேரூராட்சி அலுவலக நுழைவுவாயிலில் படுக்கைகளுடன் அமா்ந்து மனைவியும் கணவரும் தா்னாவில் ஈடுபட்டனா். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.