வேஷம் போடும் DMK ADMK: TN-ல் Hydrocarbon திட்டங்களின் நிலை? | CP Radhakrishnan |...
வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!
பிரான்ஸில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த இந்தக் கூட்டணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், அதில் 19-21, 21-18, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த சீனாவின் சென் போ யாங்/லியு யி ஜோடியிடம் தோற்றது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 7 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
அரையிறுதியுடன் வெளியேறிய சாத்விக்/சிராக் இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியின் வரலாற்றில் இவா்கள் கூட்டணிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே இந்த ஜோடி 2022-ஆம் ஆண்டிலும் வெண்கலப் பதக்கம் வென்றது.
சாத்விக்/சிராக் வென்றுள்ள இந்தப் பதக்கம், ஒட்டுமொத்தமாக உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 15-ஆவது பதக்கமாகும். இந்த ஆண்டும் சோ்த்து, இப்போட்டியில் கடந்த 15 எடிஷன்களிலும் இந்தியா்கள் ஏதேனும் ஒரு பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.