செய்திகள் :

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

post image

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் பிடியிலிருந்து இந்த மாநிலங்கள் தப்பித்துள்ளது.

கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவரும் நிலையில், தலைநகர் தில்லியில் அதற்கு மாறாக கடும் வெய்யில் வெளுத்தி வருகின்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தில்லியின் என்சிஆர் பகுதியில் இன்று காலை 10 மணி வரை சுமார் 36 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. இதனால் தேசிய தலைநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கடும் வெப்பநிலையானது இன்று நாள் முழுவதும் நீடிக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 43 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் ஐஎம்டி எச்சரித்துள்ளது. நாளை(ஜூன் 13) வெள்ளிக்கிழமை முதல் இந்த வெப்பநிலையானது படிப்படியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கையை அடுத்து, குடியிருப்பாளர்கள் நீர் ஆகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளவும், நேரடியாகச் சூரிய ஒளி படும் உச்ச வெப்ப நேரங்களில் கூடுமானவரை வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள ஒருவர் கூறுகையில்,

தினமும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் வெப்ப அலை காரணமாக அது மிகவும் கடினமாகிறது. அதிகாலையில் கூட, சாலையில் செல்லமுடியாத அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. வீடுகளை விட்டு வெளியேறுவதே மிகவும் கடினமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

தலைநகரை வெப்ப அலை வாட்டி வதைத்து வருவதால், சுகாதார அதிகாரிகள், வானிலை நிபுணர்கள் மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க