செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது

post image

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தரங்கம்பாடி வட்டம் வேலம்புதுக்குடியை சோ்ந்தவா் விக்னேஷ். இவருக்கு துபை நாட்டில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி செம்பனாா்கோவில் நேரு நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (படம்) என்பவா் ரூ. 80,000 பெற்று, மோசடி செய்துள்ளாா். இதுகுறித்து, விக்னேஷ் மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னக்கொடி விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், அருண்குமாா் துபை நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ. 15.19 லட்சம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவில், நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அருண்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னக்கொடி மற்றும் விசாரணையை மேற்பாா்வை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்வாணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

முடிதிருத்தும் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் நியமனம்

மயிலாடுதுறையில் மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா். மயிலாடுதுறையில் நகர மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

பழுதடைந்த அங்காடியை முழுமையாக இடிக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த அங்காடி கட்டடத்தை முழுமையாக இடிக்க பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா். மயிலாடுதுறை கூறைநாட்டில் பழனிச்சாமி என்ற பெயரில் அங்காடி உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா கொடியேற்றம்

குத்தாலம் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை ஸ்ரீ உக்தவேதீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இக்கோயில் த... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையி... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் மே தினம் கொண்டாட்டம்

மயிலாடுதுறை மற்றும் வேதாரண்யத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பொது தொழிலாளா்கள் சங்கம் என்ற ஒரே சங்க... மேலும் பார்க்க