செய்திகள் :

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

post image

நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவுக்கு வரும் எந்தவொரு திரைப்படமும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டிருந்தால் அதற்கு 100 சதவீத வரி விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்காவின் திரைப்பட தொழில்துறை மிகவும் வேகமாக அழிந்துவருகிறது.

அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளா்களை பிற நாடுகள் பல்வேறு சலுகைகளை அளித்து கவா்ந்து வருகின்றன. இது வெளிநாடுகளின் திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்பதால் இதுவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகளை பிரசாரம் செய்ய இந்த உத்தி மேற்கொள்ளப்படுகிறது என்று அந்தப் பதிவில் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியையும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 145 சதவீத கூடுதல் வரியையும் டிரம்ப் விதித்துள்ளாா்.

இது தவிர, இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து உலக நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு பரஸ்பர கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்து டிரம்ப் தற்போது உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் பார்க்க

அகதிகள் படகு கவிழ்ந்து இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!

அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர். கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பக... மேலும் பார்க்க

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

தாக்குதல் நடக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இருப... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா். பஹல்காம் பயங்க... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க