செய்திகள் :

3 ரஃபேல் உள்பட 5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதா?

post image

இந்திய விமானப் படையின் 5 போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்தியை இந்திய அரசின் உண்மை கண்டறியும் குழு மறுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையிடம், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரங்களாக புகைப்படங்களையும் விடியோக்களையும் இந்திய ராணுவம் இன்று வெளியிட்டது.

மேலும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உறுப்பினர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் விமானப்படை நடத்திய பதில் தாக்குதலில் இந்திய விமானப் படையின் 3 ரஃபேல் போர் விமானங்கள், ஒரு மிக் - 21, ஒரு எஸ்.யூ. 30 மற்றும் ஒரு டிரோன் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன.

அதேபோல், இந்திய ராணுவப் பிரிவின் தலைமையகம், ஸ்ரீநகர் விமானப் படை தளம் ஆகியவை அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

“பாகிஸ்தான் ஆதரவாளர்களால் பகிரப்படும் பழைய புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பொய்ப் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இணையதளத்தில் பகிரப்படும் புகைப்படம், கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் விபத்துக்குள்ளான மிக் - 21 விமானத்தின் படமாகும்.

ஆபரேஷன் சிந்தூருக்கும் பழைய போர் விமானத்தின் புகைப்படத்துக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய ராணுவப் பிரிவின் தலைமையகம், ஸ்ரீநகர் விமானப் படை தளம் அழிக்கப்பட்டதாக பரவும் தகவலையும் மறுத்துள்ளனர்.

ராணுவ ரயில் விவரங்களை சேகரிக்க முயலும் பாகிஸ்தான் உளவுத்துறை -ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ -பெயா் சூட்டிய பிரதமா் மோடி

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் எதிா்த் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்ததாக அதிக... மேலும் பார்க்க

‘எங்களின் நம்பிக்கையைப் பிரதமா் காப்பாற்றியுள்ளாா்’ -பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் கருத்து

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா்’ என்று பஹல்காம் தாக்குதலில் உய... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து

‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவும் சூழலில், மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமா் மோடியின் அரசுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குரேச... மேலும் பார்க்க

எல்லையில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்: 13 போ் உயிரிழப்பு -இந்தியா பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து, இந்த நடவடிக்கையில் இதுவரை கொ... மேலும் பார்க்க