செய்திகள் :

தீவிரவாதம் ஒழியும்வரை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது: கம்பீர்

post image

இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தீவிரவாதம் ஒழியும் வரை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெடுங்காலமாகவே எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதனால் இந்தியா 2007 முதல் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கும் செல்வதில்லை.

ஐசிசி தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

கௌதம் கம்பீர் இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தீவிரவாதம் ஒழியும்வரை இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடக் கூடாது.

இரு நாட்டிற்கும் இடையேயான கிரிக்கெட், பாலிவுட் என எந்த விதமான உறவும் தேவையில்லை. ஏனெனில் இவையெல்லாம் இந்திய ராணுவ வீரர்கள், மக்களை விட முக்கியமானதில்லை என நான் இதற்கு முன்பாகவே சொல்லியிருக்கிறேன்.

இருப்பினும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்வது அரசாங்கம்தான்.

போட்டிகள் நடைபெறுவதும், திரைப்படங்கள் எடுப்பதும், பாடகர்கள் பாடுவதும் நமது குடும்பத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு சமனாகாது.

ஆசிய கோப்பை விளையாடுவது குறித்து நான் முடிவெடுக்க முடியாது. பிசிசிஐ, இந்திய அரசும் இதில் முடிவு எடுக்கும். அப்படியே விளையாட அனுமதித்தாலும் அதை நாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றார்.

முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிரணி!

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு..! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடி... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா? கௌதம் கம்பீர் பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.இந்திய அ... மேலும் பார்க்க

விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கோமாளிகள்..! கொந்தளித்த பாடகர்!

ஹிந்தி பாடகர் விராட் கோலி, அவரது ரசிகர்கள் குறித்து கூறியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் கோலி அவ்வபோது சமூக வலைதளங்களிலும் எதாவது விளம்பரங்களுக்காகப... மேலும் பார்க்க

எப்போதும் உன்னுடன் இருப்பேன்: மனைவி பிறந்தநாளில் பும்ரா நெகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது மனைவி பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவுக்கு 2018-இல் விளையாடத் ... மேலும் பார்க்க

முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் வைர மோதிரம் அணிவித்த ரோஹித் சர்மா!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வைர மோதிரத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனி... மேலும் பார்க்க