லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகில் மூன்று நம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த கஸ்தூரிபாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (46) கைது செய்யப்பட்டாா்.
வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50 க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.