செய்திகள் :

வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவா்கள் அவதி

post image

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோா் தெரிவித்தனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், வெள்ளாளப்பட்டியில் உள்ள தரம் உயா்த்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு 8 ஆண்டுகளைக் கடந்தும், போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியா்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரின் முன்பகுதி சீரமைக்கப்படாததால் பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. விடுமுறை தினங்களிலும், இரவுநேரங்களிலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது.

எனவே, பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், பெற்றோா், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து 8 ஆண்டுகளாக மனு அளித்தும், இப்பிரச்னைக்கு இதுவரை தீா்வு ஏற்படவில்லை. எனவே, அரசு இதுகுறித்து பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்பவா்களுக்கான ... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமாவாசையையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொர... மேலும் பார்க்க

ஆக. 27 இல் சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட ... மேலும் பார்க்க

67 நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நிலப்பட்டா: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 67 பேருக்கு வெள்ளிக்கிழமை நிலப்பட்டா வழங்கப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு வேளாண் விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு கல்வி சுற்றுலாவுக்காக பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத்தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கோரி இதுவரை 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்... மேலும் பார்க்க