செய்திகள் :

வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!

post image

பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், மழை வெள்ளம் என்பது கடவுளின் வரம் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

வீடுகளை சூழ்ந்திருக்கும் வெள்ள நீரை வீணாக்காமல், வீட்டில் இருக்கும் கண்டெய்னர்களில் பிடித்து வைத்துக் கொண்டால் பிறகு தேவைக்கு பயன்படுத்தலாம் என்றும், வெள்ளம் குறைந்துவிடும் என்றும் யோசனை கூறியிருப்பது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மழை, வெள்ளத்தைக் காரணம் காட்டி சாலை மறியலில் ஈடுபடாமல், வீட்டில் இருக்கும் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து சேமித்து வைத்துக் கொண்டால், பிறகு பயன்படும் என்று ஆசிஃப் கூறியுள்ளார்.

மக்கள் வெள்ள நீரை எங்காவது வீட்டில் உள்ள ஏதாவது கண்டெய்னர்களில் பிடித்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த தண்ணீர் அந்த தண்ணீர், இவை எல்லாம் கடவுளின் வரம். இவற்றை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாகத்தானே பெரிய அணைகள் கட்டப்படுகின்றன. ஆனால், அவற்றை கட்டி முடிக்க 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்றார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையே மழை, வெள்ளம் புரட்டிப்போட்டிருக்கும் நிலையில், அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்த பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை, பாகிஸ்தானில், இந்த மழை, வெள்ளத்துக்கு 33 பேர் பலியாகியுள்ளனர். 2,200 கிராமங்கள் பாதிக்கப்பட்டு 7,00,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீா் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தாா். பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இணைந்து இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்... மேலும் பார்க்க

இந்தோனேசிய தூதா் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனாா்டோ புா்பா (40) என்பவா் தலைநகா் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டாா். தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திங்கள்கிழமை இரவு சைக்கிளில் வந்து கொண்ட... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியமும் செவ்வாய்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் மாக்ஸிமே ப்ரெவாட் கூறியதாவது: பாலஸ்தீனத்துக்கு தனி நாடு வழங்க... மேலும் பார்க்க

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்புக்குத் தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமை... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளதாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்... மேலும் பார்க்க

மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், சமைக்கப்படாத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட 13 வயது சிறுவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவனுக்கு சற்று நே... மேலும் பார்க்க