செய்திகள் :

வேங்கைவயல் சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டவரின் பாட்டியின் உடல் அடக்கம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வயது முதிா்வால் இறந்த மூதாட்டியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இவா், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் பாட்டி என்பதால், பரபரப்பு ஏற்பட்டு, உறவினா்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இவ்வழக்கில் ஜீவானந்தம் மகன் முரளிராஜா உள்ளிட்ட 3 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வேங்கைவயலுக்குள் வெளியாள்களை அனுமதிக்க போலீஸாா் மறுத்துவரும் நிலையில், முரளிராஜாவின் பாட்டி கருப்பாயி (84) வியாழக்கிழமை காலை வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா்.

இறுதிச் சடங்குக்கு வரும் உறவினா்களை காவல்துறையினா் வழக்கம்போல உள்ளே அனுமதிக்காமல் மறுப்பதாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இறுதிச் சடங்குக்கு வருவோரை அனுமதிப்பது என காவல்துறை முடிவு செய்து அனுமதித்தது.

இறந்த கருப்பாயியின் உடலுக்கு கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள், வழக்குரைஞா்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மூதாட்டியின் உடல்வெள்ளிக்கிழமை மாலை ஊருக்குள் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா். மாத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் காசிராஜன் என்பவா், அப்பகுதி அரசு புறம்போக்கு மற்றும் நீா்நிலை புறம்போக்கு இடங்... மேலும் பார்க்க

மாநில ஜூடோ- சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம்! அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் ப... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி பலி

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி, காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கந்தா்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமன் (6... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டச் செயல்பாடுகளை கண்காணித்து குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும்! -அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்ட செயல்பாடுகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அவ்வப்போது நேரில் ஆய்வுசெ... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவின்படி ஜகபா் அலி உடலை தோண்டியெடுத்து ‘எக்ஸ்ரே’ எடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக ‘எக்ஸ்ர... மேலும் பார்க்க

முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல்!

புதுக்கோட்டை நகரில் தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை நகரிலுள்ள மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகள், காய... மேலும் பார்க்க