செய்திகள் :

வேங்கைவயல் விவாகரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

post image

வேங்கைவயல் விவாகரத்தில் சிபிசிஐடி விசாரணை முழுமையாக இல்லை என மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீஸார், அதே பகுதியைச் சோ்ந்த 3 பேர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதன் தொடா்ச்சியாக கடந்த மாா்ச் 12 இல் நடைபெற்ற முதல் விசாரணை அமர்வில், குற்றம்சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, விசாரணை மாா்ச் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2இல் குற்றம்சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரும் ஆஜராகி, தங்களுக்கும் இச்சம்பவத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் மனுதாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஏப். 3க்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் சி. பாரதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(மார்ச் 27) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதில், காவல் துறை விசாரணை முழுமையாக இல்லை என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றலாம் என்று மனுதாரர் வாதிட்டார்.

காவல் துறை விசாரணை முழுமையாக இல்லை என்று மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி தெரிவித்து விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்! 8-வது ஊதியக் குழுவில் உயரும் சம்பளம்!

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க