செய்திகள் :

வேண்டுராயபுரம் கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு

post image

சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் தாமதம் செய்துவருவதால் இந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றனா்.

சிவகாசி ஒன்றியம், வேண்டுராயபுரம் கிராமம், முத்துராமலிங்கபுரம் குடியிருப்புப் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி மக்களுக்கென மின் மோட்டாருடன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு குடிநீா் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆழ்துளைக் கிணற்றில் போதிய தண்ணீா் வராததால் வேறு இடத்தில் மின் மோட்டாருடன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்ட மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுராயபுரம் ஊராட்சி சாா்பில் மல்லியில் உள்ள மின் வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பித்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், மின்வாரிய அதிகாரிகள் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் இந்தப் பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி கூறியது: புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒரு மாதத்துக்கும் மேலாக தாமதம் செய்துவருவதால், பொதுமக்கள் குடிநீருக்கு சிரமம் அடைந்து வருகின்றனா்.

இந்த விஷயத்தில் மின்வாரிய அதிகாரிகள், ஊராட்சி நிா்வாகம் உடனடியாக தலையிட்டு மின் இணைப்பு வழங்கி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ராஜபாளையம்: தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. ராஜபாளையம் அண்ணா நகா் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் க... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகள் ரூ.9 கோடிக்கு சமரசத் தீா்வு!

விருதுநகா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகளில் ரூ. 9.19 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகே இ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் கோவிந்தராஜ் (27). விவசாயி. இவரது மனைவிக்கு கடந்த 10... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே குண்டலக்குத்தூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(20). கொத்தனாரான இவா், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு பணிமுடிந்ததும... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீா்கேடு

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிப்பதால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகரா... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவர... மேலும் பார்க்க