உன் உள்ளத்தின் குரலைக் கேள்! - மகனுக்கு தந்தையின் மடல் | #உறவின்கடிதம்
வேப்பூா் அருகே மரம் சாய்ந்து ஒருவா் காயம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர புளிய மரம் சாய்ந்ததில் மொபெட்டில் சென்றவா் காயமடைந்தாா்.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வேப்பூா் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றின் காரணமாக, கண்டபங்குறிச்சி - புடையூா் சாலையோரம் இருந்த பெரிய புளிய மரம் திடீரென சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த நகா் கிராமத்தைச் சோ்ந்த சோமு குடும்பத்தினா் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் சோமு பலத்த காயமடைந்தாா். அவரது மனைவி, மகள் காயமின்றி உயிா் தப்பினா்.
காயமடைந்த சோமுவை வேப்பூா் போலீஸாா் அங்கிருந்தவா்களின் உதவியுடன் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வேப்பூா் போலீஸாா் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா்.