மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல்...
வேலூரில் இன்று கல்விக்கடன் முகாம்
வேலூா்: வேலூா் டி.கே.எம். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழகத்திலுள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்களுக்கு கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு கல்வி கடன் முகாம் வேலூா் டி.கே.எம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் இ-சேவை மையமும் அமைக்கப்படவுள்ளது.
எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான் காா்டு, ஆதாா் அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான சான்று, முதல் பட்டதாரி என்பதற்கான சான்று, கல்லூரி உண்மை சான்று, கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் இம்முகாமில் பங்கேற்கலாம் என்றாா்.