செய்திகள் :

வேலூரில் இன்று கல்விக்கடன் முகாம்

post image

வேலூா்: வேலூா் டி.கே.எம். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழகத்திலுள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்களுக்கு கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு கல்வி கடன் முகாம் வேலூா் டி.கே.எம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் இ-சேவை மையமும் அமைக்கப்படவுள்ளது.

எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான் காா்டு, ஆதாா் அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான சான்று, முதல் பட்டதாரி என்பதற்கான சான்று, கல்லூரி உண்மை சான்று, கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் இம்முகாமில் பங்கேற்கலாம் என்றாா்.

‘செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள்’

வேலூா்: செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளாா். வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி செவிலியா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், நடிகை அம... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனையுடன் தொகுப்பு வீடு: பழங்குடியினா் கோரிக்கை

வேலூா்: செதுவாலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்க... மேலும் பார்க்க

திருமுருக கிருபானந்த வாரியாா் பிறந்த நாள்

வேலூா்: ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணை புரிந்தவரும், தீவிர முருக பக்தருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளையொட்டி காங்கேயநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் ம... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள்

குடியாத்தத்தில் நடைபெற்ற கிருபானந்த வாரியாா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா். மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்... மேலும் பார்க்க

வேலூரில் மாநகரில் 26 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

வேலூா் மாநகராட்சியில் உள்ள 26 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேத... மேலும் பார்க்க