செய்திகள் :

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

post image

மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், பல்வேறு சங்கங் கள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், வேலூா் மாவட்டம் முழுவதும் பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஏராளமான கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

அதேசயமம், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலா்கள் சங்க கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தன. அவற்றையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அந்த கொடிக்கம்பங்கள் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!

திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த க... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியி... மேலும் பார்க்க

சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது. காட்பாடி வனச... மேலும் பார்க்க

ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது

அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். . வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக... மேலும் பார்க்க

தம்பதி விஷம் குடித்து தற்கொலை

வேலூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா்(50), கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(48). இ... மேலும் பார்க்க