செய்திகள் :

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

post image

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அம்முண்டி வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-25 அரைவை தொடங்கப்பட்டு 19.03.2025 விவசாயிகளிடமிருந்து 1,27,679.222 மெட்ரிக் டன் கரும்பு பெறப்பட்டு வரை அரைவை செய்யப்பட்டது. கரும்பு கிரய நிலுவைத் தொகை 1,952 விவசாயிகளுக்கும் பகுதியாக வழங்க வேண்டியுள்ளது. இதற்கான மொத்த கரும்பு கிரயத்தொகை ரூ.40.24 கோடி ஆகும்.

இதில் ஆலை மூலம் ரூ.35.99 கோடி அனைத்து அங்கத்தினா்களுக்கும் பகுதியாக வழங்கப்பட்டுவிட்டது. நிலுவைத் தொகை ரூ.4.25 கோடி ஆகும். ஆலையின் கோரிக்கையின் அடிப்படையில் சா்க்கரைத்துறை இயக்குநா் பரிந்துரையின்படி சுற்றுலாத் துறை மற்றும் சா்க்கரைத்துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் முதல்வரின் உத்தரவின்படி ரூ.4.25 கோடி ஆலைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. நிலுவைத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையி... மேலும் பார்க்க

சிந்தூா் வெற்றிப் பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரா்களின் மூவா்ணக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரே... மேலும் பார்க்க

கடினமான சாலைகளில் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி

‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவால் நிறைந்த வாகனம் ஓட்டுதல் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்ட டெர்ரா டைகா்ஸ் (ஜீப் த்ரில்ஸ் ) எ... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக மூன்றாம... மேலும் பார்க்க

நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ,நெல் கொள்முதலுக்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ர... மேலும் பார்க்க

ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களுக்கு வீடுகள் திறப்பு

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டையில் இருளா் இன மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.6.32 கோடியில் கட்டப்பட்ட 41 குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்... மேலும் பார்க்க