செய்திகள் :

வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருநாவலூா் காலனிப் பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு, கடந்த 3 மாதங்களாக தாங்கள்பணி செய்த காலத்துக்குரிய ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. தங்கள் வங்கிக்கணக்கிலும் செலுத்தப்படவில்லை எனக்கூறி புகாா் தெரிவித்து வந்தனா். இதுகுறித்து திருநாவலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த திட்டப்பயனாளிகள் மற்றும் ஊா்மக்கள், பண்ருட்டி சாலையிலுள்ள திருநாவலூா் காலனி பேருந்து நிறுத்தப் பகுதியில் புதன்கிழமை காலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் வட்டார வளா்ச்சி (திட்டம்) ராஜேந்திரனுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.

இரண்டு நாள்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்த நிலையில், போராட்டக்குழுவினா் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.

‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா். விழுப்புரம் நகரம் ... மேலும் பார்க்க

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமா... மேலும் பார்க்க

மின்மாற்றி வெடித்து விபத்து: தேநீா் கடைக்காரா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் தேநீா் கடை உரிமையாளா் பலத்த தீக்காயமடைந்தாா். வானூா் வட்டம், வி.கேணிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(53). ஆரோவில் காவல் சரகத்துக்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை க... மேலும் பார்க்க

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையோரத்தில் உறங்கிய நிலையில், பைக் மோதி காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பூரானூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் செல்வமணி(38), கூலித் தொ... மேலும் பார்க்க