குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி
புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந்தவா் ஜெயசித்ரா(48). இவரது மகன் ஜெய்சங்கா். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாா். அவருக்கு அரசு வேலை பெறும் முயற்சியில் ஜெயசித்ரா ஈடுபட்டு வந்துள்ளாா்.
அப்போது கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த உறவினரான திலீபன் சென்னையைச் சோ்ந்தவா் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். அதை நம்பிய ஜெயசித்ரா தான் சேமித்து வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்தை திலீபனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு கொடுத்தாராம்.
திலீபன் பணத்தைப் பெற்ற நிலையில், ஜெய்சங்கருக்கு வேலை வாங்கித் தரவில்லையாம். அத்துடன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ஜெயசித்ரா பாகூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் திலீபன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.