செய்திகள் :

வேளாங்கண்ணியில் துணை அஞ்சலகம் திறப்பு: தேவூா் அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

post image

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பின்புறம் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் நிலைய கட்டடத்தை, நாகை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா ஆகியோா் திறந்துவைத்தனா்.

தொடா்ந்து, நாகை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் கூறியது:

மக்களுக்காக அஞ்சல் துறை செயல்படுத்தும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தற்போது ப்ராஜெக்ட் ஆரோ 2.0 திட்டத்தின் கீழ் வேளாங்கண்ணி துணை அஞ்சலகம், பேருந்து நிலையம் அருகில் உள்ள பேருராட்சி புதிய கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அஞ்சலகம், சேமிப்பு வங்கி, ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, அஞ்சல் வங்கிச் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் உள்ளன.

இதேபோன்று தேவூா் துணை அஞ்சலகமும் ப்ராஜெக்ட் ஆரோ 2.0 திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது. தேவூா் அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (மாா்ச் 24) தொடங்கி ஏப்.7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றாா்.

இந்நிகழ்வில், கீழையூா் ஒன்றியச் செயலா் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூா் செயலா் மரிய சாா்லஸ் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள், அஞ்சல் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்ற... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க