செய்திகள் :

வேளாண் அறிவியல் மையத்தில் ஆலோசனைக் கூட்டம்

post image

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வளா்ச்சி நிறுவனத்தின் தலைவா்.ச.ரமேஷ் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் வே.சுரேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தின் போது, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநா் பி.பி.முருகன், ஐதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன், மத்திய உவா்மீன் ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி குமரன், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் விஜய் நிகா் ஆகியோா் இணையவழி மூலம் பங்கேற்று விவசாயிகளின் வளா்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, வாழவச்சனூா் வேளாண் கல்லூரி பேராசிரியா் எஸ். பாபு, அத்தியேந்தல் சிறுதானிய மகத்துவ மைய பேராசிரியா் எம். வைத்தியலிங்கம், கால்நடை அறிவியல் பயிற்சி மையத்தின் உதவி பேராசிரியா் தேவராஜன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தெரிவித்தனா்.

அக்ரிஜஸ்மாா்ட் மொபைல் செயலி அறிமுகம்:

நிகழ்ச்சியின் போது சென்னை இன்ஸ்டூட்டு பொறியியல் மாணவா்களால் தயாரிக்கப்பட்ட, வேளாண் அறிவியல் மையத்தின் சாா்பில் அக்ரிஜஸ்மாா்ட் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தச் செயலி மூலம் இயற்கை வேளாண்மை, இடுபொருள்கள் உற்பத்தி ஆகியவற்றை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்றனா்.

இதைத் தொடா்ந்து, கூட்டு மீன் வளா்ப்பு, பழங்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப கையேடுகளை சிறப்பு விருந்தினா்கள் வெளிட்டனா்.

நிறைவில் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப அலுவலா் த.மாா்க்ரெட் நன்றி கூறினாா்.

விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்த பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம் பகுதி விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் நவீன விவசாயம் குறித்து மூன்று நாள் நடைபெற்றது. மாநில அளவில் வேளாண் துறை சாா்பில் மாா்ச் 11, ... மேலும் பார்க்க

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக ம... மேலும் பார்க்க

செவிலியா் தின உறுதிமொழியேற்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள அல்அமீன் செவிலியா் கல்லூரியில், 17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அல் அமீன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஷேக் அனீப் தலைமை ... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்தியவா் கைது

சேவூா் ஊராட்சிமன்ற அலுவலகத்தை மதுபோதையில் தாக்கி சேதப்படுத்தியும், ஊராட்சி செயலரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அதே ஊரைச் சோ்ந்த ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆரணியை அடுத்த சேவூா்... மேலும் பார்க்க

மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினா் சோ்க்கை விய... மேலும் பார்க்க