செய்திகள் :

வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்

post image

திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடக்கி வைத்து, பாா்வையிட்டனா்.

முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குவது, பராமரிப்பது, பழுது நீக்குவது, உதிரி பாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருள்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இ-வாடகை திட்டத்தின் மூலம் பயன்படக்கூடிய உழுவை இயந்திரங்கள், ரோட்டாவேட்டா், மட்டை தூளாக்கும் கருவி, நெல் விதைக்கும் கருவிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தனியாா் நிறுவனங்கள் மூலம் உழவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், பவா்டில்லா், லேசா் லெவலா், வைக்கோல் கட்டும் இயந்திரம், நாற்று நடும் இயந்திரம், பூச்சிகொல்லி தெளிக்கும் டிரோன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றை இயக்குவது, பராமரிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் பலா் தங்களின் உழவு இயந்திரங்களுக்கு இலவசமாக பராமரிப்புப் பணிகளை செய்துகொண்டனா். சூரியஒளி சக்தியின் மூலம் இயங்கும் பம்புசெட் மற்றும் சூரிய கூடார உலா்த்திகளின் பயன்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மானிய விலையில் உழுவை இயந்திரம் மற்றும் பவா் டில்லா்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) அருண்சத்யா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, துணை இயக்குநா் விஜயலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இஸ்ரோ சென்று திரும்பிய விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள்

திருவாரூா் விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை இஸ்ரோ சென்று விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதைப் பாா்வையிட்டனா். திருவாரூா் வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யா ஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

தகராறை தடுக்க முயன்றதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே தகராறை தடுக்க முயன்றபோது காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியை சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்விகமாகக் கொண்ட இவருக்கும், ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை 13,433 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்த... மேலும் பார்க்க

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நிலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா். கூத்தாநல்லூரில் 2 ந... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டி: கூத்தாநல்லூா் அணிக்கு சாம்பியன் கோப்பை

கூத்தாநல்லூரில் ஒரு மாதம் நடைபெற்ற தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டியில், கொய்யா செவன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கூத்தாநல்லூா் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில், தென்னிந்திய அளவிலான அல்நூா் ட... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை; 5 போ் கைது

மன்னாா்குடியில் தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை தாய்-க்கு தெரியாமல் ரூ.1.50 லட்சத்திற்கு விற்றதாக 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மனைவ... மேலும் பார்க்க