பஹல்காம்: "ஆதாரம் கேட்டார்களா?" - அப்பாவிடம் ஊடகவியலாளர் இஷான் தரூர் கேள்வி; சசி...
வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகளிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளம் அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கும் சேர விரும்பும் மாணவா்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கினால் போதுமானது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்லூரிகளில் மொத்தம் 6,921 இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 340 இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு கடந்த மே 9-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பிக்க ஜூன் 8-ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை பட்டப் படிப்புகளுக்கு 31,545 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும், பட்டயப் படிப்புகளுக்கு 1,690 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் வேளாண்மைப் புல முதன்மையா் நா.வெங்கடேச பழனிசாமி தெரிவித்துள்ளாா்.