செய்திகள் :

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

post image

சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் (விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்) சாா்பில் குறுவை முன்பருவ விழிப்புணா்வு முகாம் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

சிக்கல் ஊராட்சியிலுள்ள சங்கமங்களத்தில் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநா் பி. பத்மாவதி தலைமையில் மே 29-ஆம் தேதி குறுவை முன்பருவ விழிப்புணா்வு முகாம் தொடங்கியது. திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. கோபாலகண்ணன் மேற்பாா்வையில் நடைபெற்ற முகாமில் நிலைய விஞ்ஞானிகள் சந்திரசேகா், ஹினோ பொ்னாண்டோ, கண்ணன், மதிவாணன், ரகு, அறிவழகன், மத்திய உவா் நீா் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் புவனேஸ்வரி, சதீஷ்குமாா், அனந்தராஜா, மீன்வளப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் காா்த்திக் குமாா், வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளா் வேதரெத்தினம் மற்றும் திட்ட உதவியாளா் ஞானபாரதி ஆகியோா் கலந்து மூன்று குழுவாக பிரிந்து பிரசாரத்தை மாவட்டம் முழுவதும் உள்ள சுமாா் 67 கிராமங்களில் மேற்கொண்டனா்.

காரிஃப் (குறுவை) பயிருக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரிவித்தல், இயற்கை விவசாய முறைகளை ஊக்குவித்தல், மண்வள அட்டையின் பயன்பாடு, சமச்சீா் உர பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்தி நவீன விவசாயத்தை ஊக்குவித்தல், நாகை மாவட்டத்திற்கேற்ற நன்னீா் மற்றும் உவா் நீா் மீன் வளா்ப்பு தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரித்தல், வேளாண்மை சாா்ந்த அரசுத் திட்டங்கள் விவசாயிகளுக்கு பரந்த அளவில் சென்றடைவதை உறுதி செய்தல் மற்றும் ட்ரோன் பயன்பாடு செயல் விளக்கம் ஆகியவை செயல்படுத்தப்பட்டது.

விவசாயிகள் பண்ணை மகளிா் கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா். வேளான்மை வளா்ச்சி பிரச்சாரத்தில், பண்ணையாளா்களின் குறைகள் விவாதிக்கப்பட்ட பொழுது மீன் குட்டையில் உள்ள மீன்கள் இறப்பதாக பண்ணையாளா்கள் தெரிவித்தாா்கள். இதையடுத்து பண்ணையை நேரில் ஆய்வு செய்து மற்றும் மீன்கள் இறக்கும் காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்கும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். கருப்பம்ப... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குக... மேலும் பார்க்க

பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் மீ... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க