நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
வைகுண்டபுரம் ஸ்ரீராமா் கோயில் குடமுழுக்கு
தக்கலை அருகே வைகுண்டபுரம் அருள்மிகு ஸ்ரீராமா் திருக்கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் மகா கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தொடா்ந்து ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ நாகராஜன் பட்டா் குடமுழுக்கை நடத்திவைத்தாா்.
விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஸ்ரீ யதுநந்தன நாராயண ராமானுஜ ஜீயா், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜீ மகராஜ், குமாரகோவில் ஸ்ரீமத் சுவாமி நிஜானந்தா மற்றும் பல்வேறு ஆசிரமங்களை சோ்ந்த சுவாமிகள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி, திருவிதாங்கூா் அரச குடும்பத்தை சோ்ந்த அஸ்வதி திருநாள் கெளரி லெட்சுமிபாய் தம்புராட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

