செய்திகள் :

வைகை அணையில் 69 அடியில் தண்ணீா் நிலைநிறுத்தம்

post image

தேனி: வைகை அணையில் கடந்த 17 நாள்களாக அணையின் நீா்மட்டம் 69 அடிக்கும் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீா்மட்டம் கடந்த ஆக.5-ஆம் தேதி 69 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). வழக்கமாக, அணையின் நீா்மட்டம் 69 அடியை எட்டியதும், வைகை ஆற்றன் கரையோரப் பகுதிகளுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் வைகை ஆற்றில் திறந்துவிடப்படும்.

தற்போது, அணையில் அதன் முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்கி வைக்க நீா்வளத் துறையினா் முடிவு செய்துள்ளனா். இதனால், அணை நீா்மட்டம் கடந்த ஆக.5-ஆம் தேதி முதல் தற்போது வரை தொடா்ந்து 69 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை, 69.46 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 638 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து வியாழக்கிழமை காலை 6 மணிக்கு பெரியாறு பிரதானக் கால்வாய்க்கு விநாடிக்கு 900 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 969 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீா், இரவு 7 மணிக்கு நிறுத்தப்பட்டது.

பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயில் முகூா்த்தக் கால் நடும் விழா

பெரியகுளம்: பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக் கால் நடும் விழா நடைபெற்றது.பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயிலில் பாலாலய... மேலும் பார்க்க

சந்தனக் கட்டைகளைத் திருப்பி அளித்த வனத் துறை : விவசாயிகள் கவலை

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சந்தன மரக் கிட்டங்கிக்கு வனத் துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக் கட்டைகளில், 2,558 கிலோ சிறிய ரக சந்தனக் கட்டைகள் திருப்பி அளிக்கப்பட்டதால் விவசாயி... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள தெப்பத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (73). இவா் ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

பெரியகுளம்: பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள கோம்பைத்தொழுவில் மின் வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மின் வாரியம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் மின் திருட்டு ... மேலும் பார்க்க

நெல் பயிா்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தேனி: தேனி மாவட்டத்தில் நெல் பயிா்களின் மகசூலைப் பாதிக்கும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.இது குறித்து மாவட்... மேலும் பார்க்க