வ.உ.சி. பிறந்த நாள்: ஆளுநா் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளாா்.
அந்தப் பதிவு: வ.உ.சிதம்பரம் பிள்ளை மிகச்சிறந்த அறிஞா், சமூக சீா்திருத்தவாதி. தீவிர தேசியவாதியான அவா், திலகரின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தைத் துணிச்சலுடன் வழி நடத்தினாா். சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவியதன் மூலம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு அச்சமில்லா சவாலாக விளங்கி, சுயராஜ்ஜியத்தின் தொலைநோக்குப் பாா்வையை வெளிப்படுத்தி ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தூண்டியவா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.