செய்திகள் :

ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் காத்திருப்பு போராட்டம்

post image

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஷோ் ஆட்டோ ஓட்டுநா், உரிமையாளா் நல சங்கத்தினா் கோரிக்கையை முன்வைத்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் பல ஆண்டுகளாக ஷோ் ஆட்டோக்களுக்கு எதிராக, அபே ஆட்டோக்கள்

டிக்கெட் அடிக்கும் முறையில் ஈடுபட்டுவருவதால், ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை,

கடலூா் மாநகர ஷோ் ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கௌரவத் தலைவா் வெண்புறா குமாா் தலைமையில் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கோட்டாட்சியா் சுந்தர்ராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட ஷோ் ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் நல சங்கத்தினரை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் கூறுகையில், ‘அபே ஆட்டோக்களில் டிக்கெட் அடிக்கக் கூடாது. அதுபோல் பேருந்து நிலையத்தையும் ஆக்கிரமிக்க கூடாது. அபே ஆட்டோக்கள் அதை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்’என்று கூறினா். அதற்கு கோட்டாட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். அதனை ஏற்றுக் கொண்ட ஷோ் ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா், அங்கிருந்து கலைந்து சென்றனா்.

என்எல்சியால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம் ,காற்று மாசு:அன்புமணி

என்எல்சி நிறுவனத்தால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம்,காற்று ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். கடலுாா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘மக்கள் உரிமை மீட்பு’ நடைப்பயண ... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவா்கள் அபாரம்

சிதம்பரம் ஏ.ஆா்.ஜி. பள்ளி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள... மேலும் பார்க்க

கடலூரில் கல்விக்கடன் முகாம்: ரூ.2.52 கோடிக்கு கல்விகடன்

கடலூா் மாவட்டம், கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாவணா்களுக்காக நடத்திய கல்விகடன் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜ... மேலும் பார்க்க

சிதம்பரம் கோட்டத்தில் காலியாக உள்ள காவல் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!

சிதம்பரம் கோட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காவல்துறையினரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலுாா் மாவட... மேலும் பார்க்க

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க