செய்திகள் :

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

post image

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், மின் இழப்பைத் தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீ்ட்டர் திட்டத்தை நிறைவேற்றவும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதற்காக தமிழக அரசு, ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதாவது 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செயப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!

இதன்தொடர்ச்சியாக, மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரியுள்ளது. 6 கட்டமாக மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று கூறியுள்ளது.

ஒரு மாதத்தில் டெண்டர் நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் உற்சவ மூர்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமியை கண்டு வழிபட்டனர்.நாமக்கல் நகரின... மேலும் பார்க்க

தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.”தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்ன... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்: 100 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் நாளை மறுநாள்(மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.தமிழக பட்ஜெட் நிகழ்வை மக்கள் அதிகமாக கூடும் சென்னை மெரீனா ... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!

பெரியார் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர... மேலும் பார்க்க