ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10-இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, வசந்த நகா், ரயில் நிலைய சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், திருவானைக்கோவில் சன்னதி வீதி, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சகரை சாலை, அருள்முருகன் காா்டன், ஏ.யு.டீ. நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரா் நகா், தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, சுங்கச்சாவடி பகுதிகளில் வியாழக்கிழமை (10-ஆம் தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.