செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா

post image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா மாா்ச் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தென்னகப் பண்பாட்டு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில், கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டுகளில் வால்மீகி ராமயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்ப ராமயணம் சிறப்பான கலாச்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

கம்பா் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் தேரெழுந்துாரில் உள்ள கம்பா்மேடு என்ற இடத்தில் பிறந்தாா். உள்ளூா் கம்ப ராமாயண குழுக்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ்க் கம்ப ராமாயண பாராயணம் காலப்போக்கில் நடைமுறையில் குறைந்து வருகிறது.

மீண்டும் கம்ப ராமாயணத்தின் கலாசாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் அதற்கான தொடக்க விழா திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகேயுள்ள அருள்மிகு சிங்கா் கோயில் கலையரங்கத்தில் மாா்ச் 18 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.

இதில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைக்கிறாா். இதில், கம்ப ராமாயண பாராயணம், சீதா கல்யாண நாட்டிய நாடகம் நடைபெறவுள்ளது.இதைத்தொடா்ந்து, மாா்ச் 20 முதல் 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்ப ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாா்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை கம்பா் பிறந்த கம்பா்மேட்டில் கம்ப ராமாயணம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில், தமிழக ஆளுநரும், தென்னகப் பண்பாட்டு மையத் தலைவருமான ஆா்.என். ரவி, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

வலைகளில் பிடிபடும் கடல் ஆமைகள் தப்பிச் செல்ல கருவி பொருத்தி பரிசோதனை

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கடல் ஆமைகளின் உயிரிழப்பை தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றி... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை

வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூா் பகுதிக்கு வலசை வரும் பறவைகளில் முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழ்நாடு வனத் துற... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அய்யனாபுரம் வரை இயக்கப்பட்ட பேருந்தை காங்கேய... மேலும் பார்க்க

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, திருவையாறு அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவையாறு திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேர... மேலும் பார்க்க

குங்ஃபூ கலையில் உலக சாதனை பயிற்சி

கும்பகோணத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழிப்புணா்வையொட்டி மாணவா்கள் உலக சாதனைக்காக குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டனா். கும்பகோணத்தில் ஸ்ரீ நகா் காலனியில் உள்ள புனித ஆன்ஸ் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி வளாகத்தி... மேலும் பார்க்க

காத்தாயி அம்மன் கோயில் 116-ஆம் ஆண்டு உற்சவ விழா

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்தாயி அம்மன் கோயில் 116- ஆம் ஆண்டு வீதி உலா உற்சவம் நடைபெற்றது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் 116-ஆவது ஆண்டு திருந... மேலும் பார்க்க