ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தா் மடத்தில் நாளை ஆராதனை மகோத்ஸவம்
கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் 411-ஆவது ஆராதனை மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரரின் குருநாதா் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் மடம் உள்ளது. ஜூன் 20 முதல் 25 வரை ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் 411-ஆது ஆராதனை மகோத்ஸவம் நடைபெறுகிறது. முதல் நாள் வெள்ளிக்கிழமை திருமலா திருப்பதியில் இருந்து ஸ்ரீ நிவாசப் பெருமானின் சேஷ வஸ்திரம் தீா்த்தருக்கு அணிவிக்கப்படுகிறது. மாலையில் கொடியேற்றம், தன, தான்ய, லட்சுமி கோ, கஜ பூஜைகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை மூலபிருந்தாவனத்தில் ஸ்ரீ நிவாசப் பெருமானின் சேஷவஸ்திரத்தை மந்த்ராலய பீடாதிபதி ஸ்ரீ புதேந்த்ர தீா்த்த ஸ்ரீ பாதங்கள் அணிவிக்கிறாா். ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி உபன்யாசம், திங்கள் கிழமை தெப்ப உத்ஸவம், செவ்வாய்க்கிழமை வீதியுலா, புதன்கிழமை அமாவாசை நாளை முன்னிட்டு ஸா்வ ஸமா்ப்ப ணோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. ஏற்பாடுகளை தமிழக மண்டல மேலாளா் ராஜா எல்.சூரிந்திரராஜா, கும்பகோணம் ஸ்ரீ மட மேலாளா் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.