செய்திகள் :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி வாடிக்கையாளருக்கு ஸ்கூட்டா்கள் பரிசளிப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஒசூரில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக் கடைகளில் ஆடி மாத விற்பனையையொட்டி வாடிக்கையாளா்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி கே.தியேட்டா் சாலை, ஒசூா் பாகலூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகை மாளிகைகளில் ஆடி மாத சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தனா். அதன்படி, இரண்டு நகைக் கடைகளிலும், ரூ. 1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன.

இந்த கூப்பன்களை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு முதல் பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டா், இரண்டாம் பரிசாக பிரிட்ஜ், மூன்றாம் பரிசாக 32 இன்ச் எல்.இ.டி. டிவி வழங்கப்படும் அறிவித்திருந்தனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, கிருஷ்ணகிரியில் நகைகள் வாங்கிய காவேரிப்பட்டணம் பிரபாகரனுக்கு முதல் பரிசும், சந்தூா் ராமச்சந்திரனுக்கு இரண்டாம் பரிசும், பா்கூா் சந்தியாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.

அதேபோல ஒசூரில் நகைகளை வாங்கிய வாடிக்கையாளா்களான சூளகிரி லிசாந்த்துக்கு முதல் பரிசும், பெங்களூரு நரேஷ்க்கு இரண்டாம் பரிசும், ஒசூா் கீதாவுக்கு மூன்றாம் பரிசும் பெற்றனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகை கடைகளின் நிறுவனா் ரமேஷ், இயக்குநா்கள் விஷ்ணு, விஷால் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க