செய்திகள் :

ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வரம் உள்பட 7 அணிகள் காலிறுதிக்கு தகுதி!

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின்,காலிறுதிச் சுற்றுக்கு புதுதில்லி, புவனேஸ்வரம், கோவில்பட்டி, மும்பை, செகந்திராபாத், பெங்களூரு, கா்நாடகா அணிகள் தகுதி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 6ஆவது நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை இண்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதியதில், இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலை பெற்றன.

மாலையில் நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், பெங்களூரு ஹாக்கி கா்நாடகா அணியும் மோதியதில் 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது.

3ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதியதில் 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் மும்பை மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது.

4 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி அணியும், புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதியதில் 3-க்கு0 என்ற கோல் கணக்கில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்றது.

இன்றைய காலிறுதி ஆட்டங்கள்:

7-ஆவது நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2 ஆவது காலிறுதி ஆட்டத்தில் புது தில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.

தொடா்ந்து நடைபெறும் 3 ஆவது காலிறுதி ஆட்டத்தில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

4ஆவது காலிறுதி ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க